Theme Check

10,000 போலி வாக்காளர்கள் உருவாக்கம்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி !!

10,000 போலி வாக்காளர்கள் உருவாக்கம்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி !!

10,000 போலி வாக்காளர்கள் உருவாக்கம்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி !!
X

உத்தர பிரதேசத்தில் 10,000 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்கு தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் பணிகளை தொடங்கியுள்ளன. இந்தநிலையில் அங்கு 10,000 போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஹாரன்பூர் பகுதியைச் சேர்ந்த விபுல் சைனி (24) இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து கொடுத்ததை உளவுத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து விபுல் சைனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள், நிபுணர்கள் நேற்று விபுல் சைனியின் வீடு, அலுவலகத்துக்குச் சென்று அவர் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் கைப்பற்றினர்.

yogi

மேலும், சைனியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், அதில் 60 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக விபுல் சைனி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை ஹேக் செய்து 10,000-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்துக் கொடுத்துள்ளார். ஒரு வாக்காளர் அட்டைக்கு பொதுமக்களிடம் ரூ.200 வரை பணம் பெற்றுள்ளார் என்று போலீசார் கூறுகின்றனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்பவரின் தூண்டுதலின்பேரில் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்ததாக விபுல் சைனி வாக்குமூலம் அளித்துள்ளார். அர்மான் மாலிக்கை தீவிரமாக தேடி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it