Theme Check

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் !!

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் !!

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் !!
X

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது இரவில் கைது செய்துள்ளது. மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

fish

அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

fish

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it