Theme Check

விரைவில் 2000 தீயணைப்பு வீரர்கள் நியமனம்.. அமைச்சர் தகவல்..!

விரைவில் 2000 தீயணைப்பு வீரர்கள் நியமனம்.. அமைச்சர் தகவல்..!

விரைவில் 2000 தீயணைப்பு வீரர்கள் நியமனம்.. அமைச்சர் தகவல்..!
X

கர்நாடக மாநிலம், பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் ஜெயநகர் மண்டலத்திற்கான தீயணைப்பு துறைக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை காவல்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்களின் உயிர், அவர்களது உடைமைகளை பாதுகாப்பதில் தீயணைப்பு படை வீரர்களின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது.
Naxalite eradication force will not be eliminated in Karnataka; Police Minister  Araka Gyanendra informed | கர்நாடகத்தில் நக்சலைட்டு ஒழிப்பு படை  நீக்கப்படாது; போலீஸ் மந்திரி அரக ...
மாநிலத்தில் தீயணைப்பு படையின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தீயணைப்பு துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது.

கர்நாடகத்தில் தீயணைப்பு படைக்கு புதிதாக 2 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்பேரில், விரைவில் 2 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 24 மணி நேரமும் ஹோட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.

ஹோட்டல்கள் திறந்திருந்தால், அதற்காக நள்ளிரவிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது விமானம், பஸ், ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ஹோட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்ற பகுதிகளிலும் ஹோட்டல்கள் திறப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். அதன்பிறகு தான் முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story
Share it