Theme Check

நீலகிரியில் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் இலவச எண் அறிவிப்பு..!!

நீலகிரியில் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் இலவச எண் அறிவிப்பு..!!

நீலகிரியில் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் இலவச எண் அறிவிப்பு..!!
X

கடந்த 15 நாட்களாகவே தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

Rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து.

இந்நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

School-leave-for-rain

அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தது அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it