2வது திருமணம் செய்த பெண்ணுக்கு தொந்தரவு.. முதல் கணவர் கொலை.. 2ஆவது கணவருக்கு சிறை..
2ஆவது திருமணம் செய்த பெண்ணுக்கு தொந்தரவு.. முதல் கணவர் கொலை.. 2ஆவது கணவருக்கு சிறை..

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் டி.ஜெ ஹள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் டசிப் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியின் முன்னாள் கணவனை குத்தி கொலை செய்ததாக கூறினார். மேலும், ஆட்டோ ட்ரைவரின் மனைவி கொலை செய்யப்பட்ட இர்பான் என்ற நபரை திருமணம் செய்துகொண்டுவிட்டு சிலகாலம் அவரோடு வாழந்துள்ளார்.
பின்னர் அவரை விட்டு பிரிந்த அப்பெண் இரண்டாவதாக ஆட்டோ ஓட்டுநரோடு வாழ்ந்து வந்தார் . ஆனால் மனைவியை பிரிந்து வாழ முடியாத முதல் கணவர் இர்பான் அப்பெண்ணிடம் தினம் வந்து தகராறு செய்து தன்னோடு வந்து வாழும்படி கலாட்டா செய்து வன்முறையில் ஈடுபட்டு வந்தார் .
சம்பவத்தன்று இப்படி மீண்டும் அவர் தகராறு செய்தப்போது இரண்டாவது கணவர் டசிப் அவரை கத்தியால் குத்தி கொன்றார் . இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து கொலை செய்த ஆட்டோ ட்ரைவர் டசிப்பை கைது செய்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in


