15 செல்போன்களில் 400 ஆபாச படங்கள்.. கணவரின் காமலீலையால் அதிர்ந்த மனைவி.. முதலிரவுக்கு மறுத்தது ஏன்? புதிய தகவல்கள்..
15 செல்போன்களில் 400 ஆபாச படங்கள்.. கணவரின் காமலீலையால் அதிர்ந்த மனைவி.. முதலிரவுக்கு மறுத்தது ஏன்? புதிய தகவல்கள்..

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் பேங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் தஞ்சையைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் முதலிரவில் மனைவி தனி அறையில் அடைத்துவைத்து விட்டு, எட்வினும் தனி அறைக்கு சென்றுவிட்டார். ஆனால் எட்வின் அறையில் செல்போனில் யாரிடமோ விடிய விடிய ஆபாசமாக பேசி கொண்டிருந்திருக்கிறார். திருமணம் முடிந்து சில நாட்கள் இப்படியே இருந்ததால் சந்தேகத்தில் எட்வின் செல்போனை தேடியுள்ளார் அவரது மனைவி. கிடைத்தது ஒன்று அல்ல 15 செல்போன்கள். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
அதில் கதாநாயகன் எல்லாம் தனது கணவர் எட்வின் என்பதை கண்டு அதிர்ந்தார். ஆனால் பல பெண்களை தனித்தனியே அழைத்து உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. ஏராளமான பெண்களின் நிர்வாண போட்டோக்களும் இருந்தது. பெரும்பாலானோர் வங்கி கஸ்டமர்கள்தான். ஜாலியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் எஸ்எம்எஸ்-களும் அந்த செல்போன்களில் இருந்துள்ளன. தான் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றுகொண்டே குளிக்கும் வீடியோ, அதே நிலையில் நின்றுகொண்டே பெண்களிடம் பேசும் வீடியோகால் போன்றவையும் செல்போன்களில் பதிவாகி இருந்தது.
இதை பார்த்து பதறிபோய் மாமியார் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்ல அவர்கள் இதெல்லாம் சாதாரணம் என கூறினர். எல்லாதையும் மனைவி தெரிந்துகொண்டதை அறிந்த எட்வின் இரு முறை மனைவியை கொலை செய்ய முயன்றுள்ளார். பிறகு தனது தந்தை, சகோதரனை வரவைத்து அவருடன் சென்று தஞ்சை சரக டிஐஜி-யிடம் கணவரின் காமகளியாட்டம் குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து எட்வின் உட்பட அவரது குடும்பத்தார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்து கொண்ட எட்வின் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் வாங்கி கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் ஆபாச வீடியோக்களை பார்த்ததோடு அதனை தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டிருந்தார். அதனை நீதிமன்றத்தில் சமர்பித்து ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக எட்வின் உள்ளிட்டோரை கைது செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. தலைமறைவாக உள்ள எட்வினை போலீசார் தேடி வருகிறார்கள்.
newstm.in




