அரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
அரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

நேற்று சென்னையில், அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் சூர்யாவைப் பற்றி தான் தவறாக நினைத்து விட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்களுக்காக நடத்தப்படும் அகரம் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘சிங்கம்’ படத்தில் வில்லன்களை சூர்யா அடிப்பதைப் பார்த்து இவருக்கெல்லாம் மனித நேயம் இருக்குமா என்று இதுநாள் வரையில் நினைத்திருந்தேன். ஆனால் அவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரைப் பற்றிய பிம்பம் மாறி விட்டது. அடுத்த வாரம் முதல் இனி அரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in
Tags:
Next Story

