Theme Check

தமிழகத்தில் புதிதாக 4,848 செவிலியர்கள் நியமனம்!

தமிழகத்தில் புதிதாக 4,848 செவிலியர்கள் நியமனம்!

தமிழகத்தில் புதிதாக 4,848 செவிலியர்கள் நியமனம்!
X

கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் செவிலியருக்கு மாத ஊதியும் ரூ14,000மும், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11,000மும் வழங்கப்பட உள்ளது.

ma subramaniyan

கொரோனா நோய்த்தொற்றில் பணியாற்றியவர்களுக்கும், உள்ளூரில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணிவழங்க வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகையில் பணிநியமனங்கள் செய்வதில் இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும். 69% இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேரும், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேரும் ஆக மொத்தம் 7,296 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it