மாணவிகள் உள்ளாடைகளை களைய செய்த விவகாரம் – 5 பேர் கைது!!

மாணவிகள் உள்ளாடைகளை களைய செய்த விவகாரம் – 5 பேர் கைது!!

மாணவிகள் உள்ளாடைகளை களைய செய்த விவகாரம் – 5 பேர் கைது!!
X

கேரளாவில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தினர். தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிர்பந்தித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். தனது மகளை போல் பிற மாணவிகளையும் உள்ளாடையை கழற்ற சொல்லி நிர்பந்தித்ததாக புகாரில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

neet-dress 1

மைய கண்காணிப்பாளர், பார்வையாளர் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர், கொல்லம் மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவில்லை என கூறினர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது.

தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். இந்நிலையில், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.

newstm.in

Next Story
Share it