கடலூரில் 7 பெண்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!!
கடலூரில் 7 பெண்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!!

கடலூர் மாவட்டம் கொடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றனர்.
அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா, பிரியா, நவநீதா ஆகிய மூன்று இளம் பெண்கள், சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக கண்டெடுத்தனர். அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து வருத்தம் அளிப்பதாகவும், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
I’m saddened by the drowning of youngsters in Tamil Nadu’s Cuddalore. In this time of grief, my thoughts are with the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 6, 2022
newstm.in

