74 ஆண்டுகால போராட்டம்.. உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி இன்று பதவியேற்றார் !
74 ஆண்டுகால போராட்டம்.. உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி இன்று பதவியேற்றார் !

பாகிஸ்தான் விடுதலையடைந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்றுக் கொண்டார்!
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரைக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4ஆது இடத்தில் உள்ளதால் அவரை உச்சநீதிமன்ற நீதியாக நியமிப்பது தவறு என பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.
ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். 20 ஆண்டுகள் வரை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in