Theme Check

போரில் இறங்கிய பிரேசில் மாடல் அழகி ஏவுகனைத் தாக்குதலில் பலி..!!

போரில் இறங்கிய பிரேசில் மாடல் அழகி ஏவுகனைத் தாக்குதலில் பலி..!!

போரில் இறங்கிய பிரேசில் மாடல் அழகி ஏவுகனைத் தாக்குதலில் பலி..!!
X

உக்ரைன் மீது ரஷியா 133-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் தலிதா டூ வாலே (39), உலகெங்கிலும் பல நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு உக்ரைன் ராணுவத்தில் ஸ்னைப்பராக இணைந்தார். உக்ரைன் படையினரை நோக்கி முன்னேறும் ரஷ்யப் படையினரை ஒரு ஸ்னைப்பராக தடுத்து நிறுத்தி, போரில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

Brazil-model

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தின் மீது ரஷ்யா நடத்தியுள்ளனர். அப்பகுதியில் தலிதா இருந்த பதுங்கு குழி மீது ரஷ்யப் படையினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். முதல் ஏவுகணைத் தாக்குதலில், தலிதாவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் தலிதாவைக் கண்டுபிடிக்க பதுங்கு குழிக்குச் முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோ (40) என்பவர் சென்றுள்ளார். அப்போது தலிதா உயிருடன் இருப்பதை கண்டு ஆறுதல் அடைவதற்குள் ரஷ்யப் படையினர் அடுத்த தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிதாவும் டக்ளஸ் புரிகோவும் உயிரிழயந்தனர்.

Brazil-model

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தலிதா டூ வாலே, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராகப் போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்தியவர். அந்த நேரத்தில் அவர் ஈராக்கின் சுதந்திர குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஆயுதமேந்திய ராணுவப் படைகளான பீஷ்மர்காஸிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார்.

Tags:
Next Story
Share it