தகாத உறவில் பிறந்த 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த கொடூர தாய்!

தகாத உறவில் பிறந்த 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த கொடூர தாய்!

தகாத உறவில் பிறந்த 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த கொடூர தாய்!
X


திருவாரூர் மாவட்டத்தில், தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்-ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரேணுகாவுக்கும் முத்து என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி சண்டையால் ரேணுகாவின் கணவர் முத்து 7 ஆண்டுகளாக அவரை பிரிந்து திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ரேணுகா தற்போது தாய், தந்தை மற்றும் தங்கையுடன் தன் 3 குழந்தைகளோடு வசித்து வருகிறார். ரேணுகா குடவாசலில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கும் கமலேஷ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டு, கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரேணுகா தனது வீட்டின் பின்புறத்தில் பச்சிளம் குழந்தையை புதைத்து வைத்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வட்டாட்சியர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின் புதைக்கப்பட்ட குழந்தை தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ரேணுகா மற்றும் அவரது தாயார் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், வீட்டில் அவரது தந்தை, சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை தேடி வருகின்றனர்.

இவ்வுலகில் குழந்தை வரம் வேண்டி பல கோவில்களுக்கு செல்லும் தம்பதியினரை பார்க்கிறோம் .. மறுபுறம் இது போல் சில விஷயங்களும் நடந்து கொண்டே தான் உள்ளது..

Next Story
Share it