காதலிக்க மறுத்த சிறுமியை தீ வைத்து எரித்த திருமணமான நபர்!!

காதலிக்க மறுத்த சிறுமியை தீ வைத்து எரித்த திருமணமான நபர்!!

காதலிக்க மறுத்த சிறுமியை தீ வைத்து எரித்த திருமணமான நபர்!!
X

காதலிக்க மறுத்த சிறுமியை திருமணமான நபர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் தயாநிதி ஜெனா (27) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்த டியூசனுக்கு அந்த பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வந்துள்ளார். தினசரி அவர் படிக்க வந்த நிலையில் அவரின் மீது தயாநிதி ஜெனாவிற்கு காதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியிடம் அவர் காதலை தெரிவித்துள்ளார்.

student-stress

டியூசன் டீச்சரின் கணவர் தன்னை காதலிப்பதாக கூறியதைக் கேட்ட மாணவி அதிர்ச்சியடைந்து அதனை மறுத்துள்ளார். அதோடு தொடர்ந்து டியூசன் செல்வத்தையும் நிறுத்தியுள்ளார். மாணவியின் இந்த செயலால் தயாநிதி ஜெனா கோவத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவி அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வந்த தயாநிதி ஜெனா மாணவியை மறித்து வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

fire

பின்னர் தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை அந்த மாணவியின் மீது ஊற்றி அவர் மீது தீ பற்ற வைத்தார். உடலெங்கும் தீப்பரவிய நிலையில் மாணவி அலறி துடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

உடல் கருகிய நிலையில் மாணவி அதே இடத்தில் உயிரிழந்தார். அதே நேரம் தயாநிதி ஜெனாவும் தான் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஒரிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it