அமெரிக்காவில் புதிய வகை கொரோனா.. மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவு !!
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா.. மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவு !!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டில் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இதனால் அமெரிக்கா சீனா மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்பிறகு தடுப்பூசி உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் அங்கு மீண்டும் தொற்று பரவி வருவது அந்நாட்டு மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும் இதற்கு முந்தைய தொற்றுகளை விட வீரியம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்க மக்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு கொள்ளுமாறு மக்களுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் இது புதிய வகை கொரோனா பரவலை பிரதிபலிக்கிறது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கொரோனா நம் வாழ்க்கையை சீர்குலைக்க விடக்கூடாது, கொரோனா என்பது நாம் சமாளிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதனால் அமெரிக்காவுக்கு மீண்டும் சவால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in