காதல் தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. போலீசார் அதிரடி !
காதல் தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. போலீசார் அதிரடி !

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா (28). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டி (43) என்பவரின் மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர, கடந்த மாதம் 29ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸார் அவர்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர். மேலும், அவர்கள் இருவரையும் வீரப்பட்டி கிராமத்துக்கு வர வேண்டாம் என எட்டயபுரம் போலீசாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், கடந்த வாரம் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் சொந்தஊரான வீரப்பட்டிக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இருவரும்வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டது அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையின் பெண்ணின் தந்தையான முத்துகுட்டியே இருவரையும் கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது. இந்த கொடூர கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முத்துகுட்டி, ரேஷ்மாவின் தாய் மகாலட்சுமி(39)ஆகியோரை கைது செய்தனர்.
newstm.in