பாதுகாப்பு கோரி அதிமுக மீண்டும் காவல் துறையிடம் மனு !
பாதுகாப்பு கோரி அதிமுக மீண்டும் காவல் துறையிடம் மனு !

சென்னையில் அதிமுக வரும் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் அனு அளித்துள்ளது.
சென்னை மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் வரும் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையை தவிற அதிமுக அமைப்பு ரீதியிலான மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெறும் நிலையில், வரும் 27 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையகரத்துக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அதற்கான அனுமதி கிடைக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் போராட்டம் இன்று நடைபெற்ற நிலையில், சென்னை விரைவில் போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னையில் அதிமுக அலுவலகத்தில் வன்முறை நிகழ்ந்த நிலையில் மீண்டும் அதுபோன்று பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்ககோரிக்கை விடப்பட்டுள்ளது.
newstm.in