குழந்தை பிறந்த மறுநாளே பெயரை அறிவித்த நடிகை காஜல் அகர்வால் !!
குழந்தை பிறந்த மறுநாளே பெயரை அறிவித்த நடிகை காஜல் அகர்வால் !!

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையின் பெயரை அவரது கணவர் அறிவித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகவர்வாலுக்கு நேற்று (ஏப்ரல் 19) ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாளே குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். நடிகை காஜல் அகவர்வால் கணவர் கௌதம் கிச்சுலு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு 'நீல் கிச்சுலு' எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவரது பதிவில் 'எங்கள் மகனான நீல் கிச்சுலுவின் பிறந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா, நேற்று காலை மிகவும் சிறப்பானதாக இருந்தது. எங்கள் உலகை இன்னும் அழகாக்கும் விலைமிதிப்பற்ற சிறிய உயிரை வரவேற்றோம். அவனது அழகான சிரிப்பு, மின்னுகின்ற கண்கள் ஆகியவை எங்கள் உலகத்தை ஒளிரச் செய்தன. அவனின் சிறிய அழகான பாதம், கைகள், சிறப்பான நகங்கள் ஆகியவை அழகு, என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
newstm.in

