மீண்டும் கைதாகிறார் நடிகை மீரா மிதுன்.. இனி அவ்வளவு தான் !!

மீண்டும் கைதாகிறார் நடிகை மீரா மிதுன்.. இனி அவ்வளவு தான் !!

மீண்டும் கைதாகிறார் நடிகை மீரா மிதுன்.. இனி அவ்வளவு தான் !!
X

நடிகை மீரா மிதுனை மீண்டும் கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு மிகவும் பிடித்தமானவர். எப்போதும் பிரபலமாக வேண்டும் என அவதூறாகவும் சாதி குறித்தும், தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

meera-mithun

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த மீரா மிதுன் தரப்பினர், ஆடியோ பதிவிட்ட நாளில் வேறொரு நிகழ்வில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காவல்துறை தரப்பில், ஒவ்வொருவரின் மீதும் அவதூறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவிடுவதை மீரா மிதுன் வழக்கமாக வைத்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டியலின மக்களை விமர்சித்து தடுப்பு காவலில் கைதாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

meera-mithun

இதனைத் தொடர்ந்து, மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், சமூக வலைதளங்களில் உள்ள அவரின் பதிவுகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்குப்பதிவு செய்தனர்.

meera-mithun

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரும் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதிஎஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it