நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு.. நடிகர் விஜய் பாபு கைது !!

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு.. நடிகர் விஜய் பாபு கைது !!

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு.. நடிகர் விஜய் பாபு கைது !!
X

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் விஜய் பாபு. சமீபத்தில் இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, விஜய் பாபு தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர், படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை தெரிவித்திருந்தார்.

vijay babu

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் புயலை கிளப்பியது. இதுதொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எர்ணாகுளம் டவுன் தெற்கு காவல் நிலையத்தில் காலை 9.00 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு விஜய் பாபு ஆஜரானார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் விஜய் பாபுவை கேரள போலீசார் கைது செய்தனர்

கேரள உயர்நீதிமன்றத்தில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை விடுவிப்பதற்கு முன், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து போலீசார் ஆதாரங்களை சேகரிப்பார்கள்.

vijay babu

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இன்றுமுதல் ஜூலை 3ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விஜய் பாபுவை விசாரிக்க, விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி விஜய் பாபு கேரளாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it