900 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. சென்னை மாநகராட்சி முடிவு..!

900 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. சென்னை மாநகராட்சி முடிவு..!

900 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. சென்னை மாநகராட்சி முடிவு..!
X

சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரம் வரை வந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தன.

இதையடுத்து, கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020 - 2021 கல்வியாண்டில் ஒரு லட்சத்தைக் கடந்தது.

கடந்த 2010 - 2011 கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 320 ஆக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

அதில், மாநகராட்சி பள்ளிகளில் தற்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்றவாறு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 900 ஆசிரியர்கள் தேவை என்பது தெரியவந்தது.

இந்த ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது எனவும், இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையில் இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it