சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! ஏன் தெரியுமா?
சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! ஏன் தெரியுமா?

முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக புகார் அளித்ததால் சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் ரமேஷ்வர் தயாள் என்பவர் சாலையோரம் வண்டியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் யாதவ் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாதியை குறிப்பிட்டு பேசியதுடன், ரமேஷ்வர் தயாளின் நிலபுலன்களை கட்டாயப்படுத்தி விற்க செய்வதற்காக அவரை பணய கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டி இருந்தார்.

அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருவரும் எப்.ஐ.ஆர்.ஐ தள்ளுபடி செய்யும்படி, அலகாபாத் நீதிமன்றத்தை நாடினர். குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என தெரிவித்தனர்.
இந்நிலையில், தயாளுக்கு அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனால், தயாள் தனது கடையில் இருக்கும்போது, அவருக்கு பாதுகாப்பிற்காக ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் உடன் உள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
newstm.in

