பீகார் முதலமைச்சரை கொலை செய்ய முயற்சி!?
பீகார் முதலமைச்சரை கொலை செய்ய முயற்சி!?

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்ட நாளந்தா அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளந்தா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமா் பங்கேற்க சென்றார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் மேடை அருகே கையெறி குண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாணை மேற்கொண்டு வருவதாக பீகார் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னரே கூறப்பட்டு இருந்தது. தற்போது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in
Next Story

