5ஆம் வகுப்பு கல்வித்தகுதி பணிக்கு குவிந்த பிஇ, பிசிஏ பட்டதாரிகள்
5ஆம் வகுப்பு கல்வித்தகுதி பணிக்கு குவிந்த பிஇ, பிசிஏ பட்டதாரிகள்

இந்தியாவில் கடுமையான வேலையில்லாத திண்டாட்டம் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர். ஓரளவுக்கு வசதி இருப்பவர்கள் மட்டுமே படித்துமுடித்துவிட்டு தொழில் தொடங்கிவிடுகின்றனர். மற்றவர்களின் பாடு அவ்வளவு தான்.
அதேபோல் தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை தற்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு தகுதிக்கான கிராம உதவியாளர் பணிக்கு பி.இ., பி.சி.ஏ. முடித்தவர்கள் எல்லாம் விண்ணப்பித்துள்ளது அதிர்வலைகளை கொண்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் வீரலப்பட்டி, கேதையுறும்பு, பொருளூர், மண்டவாடி, கூத்தம்பூண்டி கிராமங்களில் தலா ஒரு கிராம உதவியாளர் இடம் காலியாக இருந்தது. இட ஒதுக்கீடு அடிப்படையில் இவற்றிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கல்வித் தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிராம உதவியாளர் பதவிக்கு, ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துசாமி தலைமையில் நேர்காணல் நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவர்களில் பி.இ., பி.சி.ஏ., பட்டப்படிப்பு படித்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இது அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
newstm.in