#BIG BREAKING:- மீண்டும் கேப்டன் ஆகிறார் நம்ம தல தோனி..!!
#BIG BREAKING:- மீண்டும் கேப்டன் ஆகிறார் நம்ம தல தோனி..!!

மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், அடுத்து 14ஆவது சீசனில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறைக்கு வழிவிட கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் தோனி ஒப்படைத்தார்.
ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது. தோனி பார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேப்டன் ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் படுமோசமாக சொதப்பி வருகிறார்.
இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா, தனது கேப்டன் பதவியை மகேந்திரசிங் தோனியிடம் கொடுத்துள்ளார்.
📢 Official announcement!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
Read More: 👇#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni @imjadeja
இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும், அதாவது 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு என்பதால், ஜடேஜாவுக்கு மேலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடத்தான் கேப்டன் பதிவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

