பேருந்துகளில் செல்போன் பார்க்கத் தடை.. அரசு புதிய உத்தரவு !
பேருந்துகளில் செல்போன் பார்க்கத் தடை.. அரசு புதிய உத்தரவு !

பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு தற்போது பேருந்து பயணம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்களை கட்டுப்பபடுத்தியுள்ளது. அவ்வப்போது ஆய்வு நடக்கிறது.
பேருந்து, ஓட்டுநர்களுக்கும் அவ்வப்போது உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பேருந்துகளில் பெரும்பாலான நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பதாகவும் உறங்குவதாகவும் பயணிகள் புகார் தரப்பில் புகார் எழுந்தது. இதனால் பயணச்சீட்டு வழங்கும்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து கழகத்துக்கு அடிக்கடி புகார்கள் பறந்தன. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் பணிநேரத்தின்போது செல்போன்களில் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் 2 படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in