பெரும் சோகம்.. விளையாடும்போதே திடலில் கபடி வீரர் மரணம் !!

பெரும் சோகம்.. விளையாடும்போதே திடலில் கபடி வீரர் மரணம் !!

பெரும் சோகம்.. விளையாடும்போதே திடலில் கபடி வீரர் மரணம் !!
X

பண்ருட்டி அருகே மைதானத்தில் கபடி விளையாடிய வீரர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டடம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிகுப்பம் காவல் சரகம் மானடிக்குப்பம் கிராமத்தில் பெரியளவில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.

போட்டியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கபடி போட்டி தொடங்கியது. இரவு 9.30 மணியளவில் கபடி விளையாட்டின் போது, பெரியபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) அணியில் விளையாடினார். அவர் எதிர் பக்கத்துக்கு சென்று விளையாடிவிட்டு திரும்பும்போது பிடிபட்டதாக தெரிகிறது.

kabadi

அப்போது எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தவரை, அங்கு இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், விமல்ராஜ் உடல் உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்தாண்டி குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். களத்திலேயே இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கபடி வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it