பிரதமர் படம் மீது கருப்பு மை – 3 பேர் கைது!!

பிரதமர் படம் மீது கருப்பு மை – 3 பேர் கைது!!

பிரதமர் படம் மீது கருப்பு மை – 3 பேர் கைது!!
X

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகளில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் மீது கருப்பு மை பூசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது. இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர்.

modi photo 1

இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும், மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர்.

modi photo 1

இதனையடுத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சசிகுமார், அரவிந்தன்,சாரதி ஆகிய மூன்று பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it