கொடூரம்.. சுரங்க மாபியா கும்பலை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி லாரி ஏற்றி கொலை !

கொடூரம்.. சுரங்க மாபியா கும்பலை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி லாரி ஏற்றி கொலை !

கொடூரம்.. சுரங்க மாபியா கும்பலை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி லாரி ஏற்றி கொலை !
X

போலீஸ் அதிகாரி மீது சுரங்க மாபியா கும்பல் லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார் உள்ளது. இந்த நிலையில், தற்போது கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது.

hariyana

இதனையடுத்து அவர் இன்று காலை 11 மணியளவில் தனது போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மேலும் கற்கள் கடத்தப்படுவதை தடுத்தார்.

அந்த வகையில், கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சுரேந்திர சிங் பிஷ்னோய் மறைத்தபோது, ஓட்டுநர்கள் அவர் மீது லாரியை ஏற்றினர். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் சில போலீசாரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

hariyana

இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் சுரேந்திர சிங் பிஷ்னோயை லாரி ஏற்றி கொலை செய்த கற்களை வெட்டி கடத்தும் கும்பலை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it