கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே பும்ரா உலக சாதனை.. அதுவும் பேட்டிங்கில் !!
கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே பும்ரா உலக சாதனை.. அதுவும் பேட்டிங்கில் !!

இந்தியா, இங்கிலாந்து இடையில் கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்து, இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்து நிலையில், கடைசிப் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அந்த எஞ்சிய ஒரு போட்டிதான் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் ஷர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். கில் (17), புஜாரா (13), விஹாரி (20), கோலி 11 (19), ஷ்ரேயஸ் ஐயர் 15 (11) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், இந்திய அணி 98/5 எனத் திணறியது.
இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பிரமாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இதனால், இந்தியாவின் ஸ்கோர் கடகடவென 300 ரன்களை கடந்தது. இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 146 (111), ரவீந்திர ஜடேஜா 104 (194) இருவரும் சதம் அடித்து ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 375/9 என மாறியது. பும்ரா, சிராஜ் இருவரும் களத்தில் இருந்தார்கள்.
400 ரன்களை கடப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் பும்ரா 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஒரு ஒயிட் பவுண்டரி, சிங்கில் என மொத்தம் 35 ரன்கள் அந்த ஓவரில் கிடைத்தது. இதற்குமுன் டெஸ்டில் ஒரு ஓவரில் 30+ ரன்களை அடித்தது கிடையாது. அதிகபட்சமாக 2003ஆம் ஆண்ட லாரா அடித்த 28 ரன்களை சாதனையாக இருந்தது. தற்போது அதனை பும்ரா காலி செய்துள்ளார்.
இந்நிலையில் சிராஜ் 2 (6) ரன்களை சேர்த்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பும்ரா 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 416/10 ரன்களை குவித்துள்ளது. இரண்டாவது நாள் முதல் செஷன் இன்னமும் முடியவில்லை.
newstm.in