ரூ.25 லட்சம் மாத சம்பளத்துக்கு மனைவியாக இருக்க அழைத்த தொழிலதிபர்.. பிரபல நடிகை வேதனை !!

ரூ.25 லட்சம் மாத சம்பளத்துக்கு மனைவியாக இருக்க அழைத்த தொழிலதிபர்.. பிரபல நடிகை வேதனை !!

ரூ.25 லட்சம் மாத சம்பளத்துக்கு மனைவியாக இருக்க அழைத்த தொழிலதிபர்.. பிரபல நடிகை வேதனை !!
X

தமிழில் 2009-ல் வெளியான 'யாவரும் நலம்' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நீது சந்திரா. தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

யுத்தம் செய் படத்தில் அமீருடன் இணைந்து இவர் நடனமாடிய கன்னி தீவு பொண்ணா பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். மேலும் சிங்கம்-3 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

neetu chandra

பீகாரை பூர்விகமாக கொண்ட நீது சந்திராவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. இதுகுறித்து நீது சந்திரா அளித்துள்ள பேட்டியில், எனது வாழ்க்கை என்பது ஒரு வெற்றிபெற்ற நடிகையின் தோல்விக் கதையை போன்றது. நான் 13 தேசிய விருதுகள் பெற்றவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். பெரிய படங்களில் நடித்து இருக்கிறேன். எந்த இயக்குநரும் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறேன் என்றார்.

neetu chandra

இப்போது என்னிடம் பணம் இல்லை, பட வாய்ப்புகளும் இல்லை. இதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அண்மையில் ஒரு படத்தில் நடிக்க தேர்வான ஒரு மணி நேரத்தில் படத்தில் இருந்து இயக்குனர் என்னை நீக்கி விட்டார். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறினார்.

neetu chandra

ஒரு பெரிய தொழில் அதிபர் மாத சம்பளத்துக்கு மனைவியாக வருமாறு என்னை அழைத்தார். மாதம் ரூ.25 லட்சம் சம்பளம் தருகிறேன் என்று பேரம் பேசினார். சம்பளம் பெற்று மனைவியாக இருக்கனுமா என அதிர்ச்சியாக இருந்தது. தன்னிடம் பேரம் பேசிய தொழில் அதிபர் யார் என்பதை நீது சந்திரா தெரிவிக்க மறுத்துவிட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it