பெங்களூரு அணியை துவைத்து எடுத்த பட்லர்.. இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான்

பெங்களூரு அணியை துவைத்து எடுத்த பட்லர்.. இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான்

பெங்களூரு அணியை துவைத்து எடுத்த பட்லர்.. இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான்
X

பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம் நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
15ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டிவிட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2ஆவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து படிதார் - கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டு பிளசிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . ஒருமுனையில் படிதார் அற்புதமாக விளையாட வர மறுமுனையில் மேக்ஸ்வெல் ட்ரென்ட் போல்ட் பந்தில் ஓபே மெக்காயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிய படிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

dsf

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தனர். ஒருபக்கம் ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. பின்னர் சாம்சன் 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து படிக்கல் களமிறங்கினார். ஒருமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுதினம் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.


ஐபிஎல்லில் ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் சமன் செய்தார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் விளாசியவராகவும் இவர் திகழ்கிறார்.

newstm.in


Tags:
Next Story
Share it