பள்ளி மாணவி இறப்பதற்கு முன்பாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது..!!
பள்ளி மாணவி இறப்பதற்கு முன்பாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது..!!

கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி எனும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி பள்ளியின் 3வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை தெரிவித்து மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிகோரி போராடினர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம். இறப்பதற்கு முன்பாக மாணவி பள்ளியில் நடந்து செல்லும் காட்சி வெளியானது.மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்லும் காட்சி வெளியானது.
12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி வெளியானது.இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

