Theme Check

மகனின் ஆசைக்காக பைக் தயாரித்த தந்தை மீது பாய்ந்தது வழக்கு!!

மகனின் ஆசைக்காக பைக் தயாரித்த தந்தை மீது பாய்ந்தது வழக்கு!!

மகனின் ஆசைக்காக பைக் தயாரித்த தந்தை மீது பாய்ந்தது வழக்கு!!
X

மகனுக்குச் சிறிய மோட்டார் சைக்கிளைத் தயாரித்துக் கொடுத்த தந்தை மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் உம்பிளிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவர் 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்லபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜோசிகா என இரண்டு மகள்களும்,மோகித் என்ற மகனும் உள்ளனர்.

இவரது மகன் மோகித் தந்தையின் மெக்கானிக் கடைக்குச் செல்லும்போது தனக்கு ஒரு சிறிய கே.டி.எம் பைக்கை தயாரித்துக் கொடுக்கும்படி கூறிவந்துள்ளார். இதனால் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஒரு வருடமாக சிறிய கே.டி.எம் பைக்கை தயாரித்து வந்துள்ளார்.

ktm small bike 1

குடியரசு தினத்தன்று தயாரித்த கே.டி.எம் பைக்கை மகனுக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். பின்னர் மகன் பைக்கை ஓட்ட, தந்தை பின்னார் அமர்ந்து ஒரு ரவுண்டு வந்துள்ளனர். இவர்கள் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமை இல்லாதபோது, சிறுவன் வாகனத்தை ஓட்டிச் சென்றால் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் என புகார்கள் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக வாகனத்தைத் தயாரித்தாக தங்கராஜ் மீது தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it