அக்னிபாத் வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுகிறதா? - பகீர் குற்றச்சாட்டு !!

அக்னிபாத் வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுகிறதா? - பகீர் குற்றச்சாட்டு !!

அக்னிபாத் வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுகிறதா? - பகீர் குற்றச்சாட்டு !!
X

இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணிப்புரியும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும் வன்முறையும் ஏற்பட்டது. எனினும் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

parliment

இது தொடர்பான ஆவணத்தையும் அவர்கள் தங்களது டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர். இந்த பிரச்சினை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து மாநிலங்களவையில், ராணுவ ஆள்சேர்ப்பில் இடஒதுக்கீடு வழங்காத நிலையில் ஜாதிச் சான்றிதழ் தேவையா என ஐக்கிய ஜனதாதளம் எம்பி குஷ்வாஹா கேள்வி எழுப்பினார்.

ராணுவத்தின் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார். எனினும் அங்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

parliment

இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து, ராணுவத்தை இழிவுபடுத்தி அவமதிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it