Theme Check

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!
X

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி கடும் வெப்பஅலை வீசி வரும் நிலையில், அதன் தாக்கத்தை தணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் உள்ள மக்கள் பாவம் என்பது வேறுகதை.

இந்த நிலையில், சென்னைக்கு மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வகையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (மே 8) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

gfd

மேலும், நாளை மறுநாள் (மே 9) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it