நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றுக.. குஜராத்தில் வெடிக்கும் போராட்டம் !

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றுக.. குஜராத்தில் வெடிக்கும் போராட்டம் !

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றுக.. குஜராத்தில் வெடிக்கும் போராட்டம் !
X

அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிாிக்கெட் ஸ்டேடியம் உலகின் மிகப்பொிய கிாிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையை கொண்டுள்ளது. இந்த மைதானம் கடந்த 1983ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் பழைய பெயா் சா்தாா் வல்லபாய் படேல் ஸ்டேடியம் ஆகும். இந்த ஸ்டேடியம் கடந்த 2015 ஆம் ஆண்டு முழுவதுமாக இடிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டது.

மறுசீரமைக்கப்பட்ட மைதானம் கடந்த 2021ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட ஸ்டேடியத்திற்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயரை குஜராத் கிாிக்கெட் வாாியம் வைத்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகமதாபாத் கிாிக்கெட் ஸ்டேடியத்தின் பெயரை மீண்டும் சா்தாா் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என மாற்ற கோாி 'சர்தார் சன்மான் சங்கல்ப் அந்தோலன் சமிதி' என்ற படித்தாா் சமூக அமைப்புகள் கோாிக்கை வைத்தனா். இதனை வலியுறுத்தி சூரத்தில் இருந்து அகமதாபாத் வரை பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனா்.

ground

இந்த நிலையில், படித்தாா் சமூக தலைவா் 50 பேரை போலீசாா் கைது செய்து உள்ளனா். இது தொடா்பாக அந்த அமைப்பை சோ்ந்தவா்கள் கூறுகையில், நாங்கள் பேரணி செல்வதற்கு முன்னதாகவே எங்களை போலீசாா் கைது செய்கின்றனா். குஜராத் அரசு, நரேந்திர மோடி ஸ்டேடியம் என்ற பெயரை சர்தார் படேல் ஸ்டேடியம் என்று மாற்றவில்லை என்றால், குஜராத் முழுவதும் எங்களது போராட்டம் தீவிரமடையும், என அவர் கூறினார்.

இந்த ஆண்டு குஜராத் சட்டபேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ள படித்தாா் சமூகத்தினர் போராட்டம் அங்குள்ள பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it