Theme Check

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் சோதனை.. வருமான வரித்துறை அதிரடி !!

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் சோதனை.. வருமான வரித்துறை அதிரடி !!

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் சோதனை.. வருமான வரித்துறை அதிரடி !!
X

சென்னை வடபழனியில் ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை வடபழனி அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த அலுவலகங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேப்போல, திருநெல்வேலியில் அமைந்துள்ள 2 ஆர்த்தி ஸ்கேன் சென்டரிலும் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

f

அதேநேரத்தில், ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு இடையூறு இன்றி வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் செலுத்தும் இடத்தில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு கண்காணிக்கும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

அதே சமயம், விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டுக்கு வந்து அவரது மனைவி மருத்துவர் கோமதியிடம் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it