சென்னை அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் மெட்ரோ பாதை அமைக்க அய்வு பணி தொடக்கம்..!!

சென்னை அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் மெட்ரோ பாதை அமைக்க அய்வு பணி தொடக்கம்..!!

சென்னை அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் மெட்ரோ பாதை அமைக்க அய்வு பணி தொடக்கம்..!!
X

சென்னை மாநகரில் 2-வது கட்டமாக ரூ.63 ஆயிரத்துத் 200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63 ஆயிரத்து 200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் இடையே 29 மீட்டட்ர் ஆழத்தில் ஆற்றின் கீழே 400 மீட்டர் நீளத்துத்க்கு இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக, மிதவைப் படகுகளில் இயந்திரங்களை பொருத்தி ஆற்றின் நடுவே மண் ஆய்வு செய்யும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, ஒத்திகை நேற்று தொடங்கியது.ஆற்றின் குறுக்கே துளையிடும் இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றுப்படுக்கையை துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு 25 மீட்டர் முதல் 50 மீட்டர் தொலைவில், 12 மீட்டர் முதல் 18 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை செய்யப்படும். மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஆய்வு 3 அல்லது 4 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story
Share it