சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.. காரணம் வீராணம் !

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.. காரணம் வீராணம் !

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.. காரணம் வீராணம் !
X

வீராணம் ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகளும் சென்னை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் ஆதாரம் ஆகும். அங்குள்ள விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. அதோடு இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாகவும் உள்ளது.

இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். கடும் வெயில், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டிரு வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

veeranam-lake-view-

இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் சென்றது. கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட மேட்டூர் தண்ணீர் கீழணைக்கு வந்தது. கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை ஏட்டி நிரம்பியுள்ளது. சென்னை மாநகர் குடிநீருக்காக விநாடிக்கு 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரி நிரம்பியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு இந்தாண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it