Theme Check

புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
X

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021&-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட

வளசரவாக்கம்,

தாம்பரம் மாநகரம் - சேலையூர்,

ஆவடி மாநகரம் - எஸ்ஆர்எம்சி

தாம்பரம் மாநகரம் - வண்டலூர்

வேலூர் மாவட்டம் - காட்பாடி

திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை ஊரகம்

கடலூர் மாவட்டம் - திட்டக்குடி

கரூர் மாவட்டம் - கரூர் ஊரகம்

புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைபட்டினம்

ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு

திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை

கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம்

ஈரோடு மாவட்டம் - பெருந்துறை

கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை

மதுரை மாவட்டம் - ஊமச்சிக்குளம்

திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஊரகம்

தேனி மாவட்டம் - பெரியகுளம்

ராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர்

திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மாதேவி

தென்காசி மாவட்டம் - புளியங்குடி

என 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it