Theme Check

இறங்கிவந்த முதலமைச்சர்.. அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு !!

இறங்கிவந்த முதலமைச்சர்.. அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு !!

இறங்கிவந்த முதலமைச்சர்.. அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு !!
X

அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் மாநில அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 11ஆவது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில அரசு ஊதிய உயர்வு அளித்தது. ஆனால் இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பழைய முறைப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அரசு பரிசீலிக்காததால், அதிருப்தி அடைந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆம் தேதி விஜயவாடாவில் மாபெரும் பேரணி நடத்தினர். மேலும், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசுக்கு எச்சரித்தனர். இதை அடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

jegan reddy

இந்நிலையில், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பலனாக, அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர பிரதேச அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதிகபட்ச உச்சவரம்பு ரூ.25,000 உடன், வீட்டு வாடகைப்படி 24 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை, வரும் 2024 ஆம் ஆண்டு மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டத் தலைமையகம் மற்றும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 16 சதவீத வீட்டு வாடகைப்படியுடன், அதிகபட்ச உச்ச வரம்பு ரூ.17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50,000 முதல் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு 12 சதவீத வீட்டு வாடகைப்படியுடன், உச்சவரம்பு ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படும் என்றும், திருத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி உயர்வு, 2022 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it