Theme Check

#BIG NEWS:- விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை.. மத்திய வேளாண் அமைச்சர் உறுதி..!

#BIG NEWS:- விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை.. மத்திய வேளாண் அமைச்சர் உறுதி..!

#BIG NEWS:- விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை.. மத்திய வேளாண் அமைச்சர் உறுதி..!
X

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமரை சந்தித்து புதுச்சேரியில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி கூறினார்.

பின்னர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதில், “புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டமான பாரம்பரிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி, பணத்தை விடுவிக்க வேண்டும். அவ்வாறு பணத்தை வழங்கினால், அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

கடந்த 2020 - 2021-ம் ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து இருந்தனர். மகசூல் இழப்பிற்கு காப்பீட்டு நிறுவனம் இதுநாள் வரை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை.

எனவே, இதில் தலையிட்டு உடனடியாக காப்பீட்டு நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகையை செலுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி அரசு வேளாண் துறை செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story
Share it