Theme Check

பறிமுதல் செய்யப்படும்.. மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..!

பறிமுதல் செய்யப்படும்.. மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..!

பறிமுதல் செய்யப்படும்.. மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..!
X

'மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது' என, முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது.

மீறி கொண்டு வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்பட மாட்டாது. எனவே, பிள்ளைகள் செல்போன் கொண்டு வராமல், பெற்றோர் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

செல்போன் கொண்டு வராமல் மாணவர்களை தடுக்கும் வகையில், ஆசிரியர்களை கொண்டு சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும்.

பஸ் படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது. எனவே, எல்லா பாடவேளைகளிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவு இடைவேளையில் பாதுகாப்பான இடத்தில் மாணவர்கள் தனித்தனியே அமர்ந்து உணவு உண்ண வேண்டும். தனியார் வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகன ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, பொறுப்பாளர் நியமிக்க வேண்டும்.

எவ்வித முன் தகவலும் இன்றி மூன்று நாட்கள் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோரிடம் ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டும்.

அதன் விவரத்தை, பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவ - மாணவியரின் ஒழுக்க நடைமுறைகளில் எந்த சமரசமும் செய்யக் கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it