Theme Check

ஏறுமுகத்தில் கொரோனா..!! ஒரே நாளில் 596 பேருக்கு தொற்று உறுதி..!!

ஏறுமுகத்தில் கொரோனா..!! ஒரே நாளில் 596 பேருக்கு தொற்று உறுதி..!!

ஏறுமுகத்தில் கொரோனா..!! ஒரே நாளில் 596 பேருக்கு தொற்று உறுதி..!!
X

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 34,60,182 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 295 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 301 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,54,889 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவிலிருந்து 217 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,19,083 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 15,881 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,56,92,495 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நேற்று உயிரிழப்பு ஏற்படவில்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story
Share it