கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!!
கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!!

குஜராத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை நேற்று 28 ஆக அதிகரித்தது.
இதுதொடர்பாக மாநில அரசு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. இந்த சம்பவத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்றதற்காக இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. குஜராத்தின் பவ்நகர், பொடாட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் 50 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
newstm.in