திமுக பிரமுகர் வெட்டிகொலை.. கிணற்றுக்குள் உடலை வீசிய கொடூரம் !!

திமுக பிரமுகர் வெட்டிகொலை.. கிணற்றுக்குள் உடலை வீசிய கொடூரம் !!

திமுக பிரமுகர் வெட்டிகொலை.. கிணற்றுக்குள் உடலை வீசிய கொடூரம் !!
X

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள எம். சுப்புலாபுரத்தில் பாலாஜி (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளது. திமுக பிரமுகரான பாலாஜி, பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் புரிந்துவந்தார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி திடீரென பாலாஜியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கவட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று இளைஞர்கள் சிலர் முயல்வேட்டைக்குச் சென்றபோது, சாமி ராஜ் என்பரின் தோட்டத்து கிணற்றுக்குள் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், சடலம் ஒன்று மிதப்பது தெரிந்தது.

crime

பின்னர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அங்கு சென்ற பேரையூர் போலீசார் அங்கு சென்றார். மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் சுமார் 40 கிலோ கல்லால் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

கை, கால்களை கட்டி கொன்று கிணற்றுக்குள் உடலை வீசியிருப்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாமல் உடல் அழுகும் வகையில் சாக்கு மூட்டையை இணைத்து 40 கிலோ கல் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இறந்தவரின் பேண்ட், சட்டையை ஆய்வு செய்தபோது, ஆதார் கார்டு ஒன்று சிக்கியது.

crime

அவர் காணாமல் போன திமுக பிரமுகர் பாலாஜி என்பது தெரிந்தது. திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடலை போலீஸார் அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை அல்லது பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் பேரையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it