அடப்பாவமே.. காது கேளாதவரை குத்தி கொலை செய்த சிறுமி..!

அடப்பாவமே.. காது கேளாதவரை குத்தி கொலை செய்த சிறுமி..!

அடப்பாவமே.. காது கேளாதவரை குத்தி கொலை செய்த சிறுமி..!
X

சத்தீஸ்கரில், ஹாரன் அடித்தும் வழிவிடாததால் ஆத்திரம் அடைந்த 15 வயது சிறுமி காது கேளாத நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் நேற்று இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. அப்போது, தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்வதற்காக அந்த சிறுமி தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால், அந்த நபர் வழி விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, அவரது வண்டிக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது கையில் இருந்த சிறிய கத்தியை எடுத்த சிறுமி, அந்த நபரின் கழுத்தில் குத்தினார். இதில் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இதைப் பார்த்து பயந்து போன சிறுமி, தனது தாயாரை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அந்த நபரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த நபர் பிறவியிலேயே காது கேளாதவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story
Share it