ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா படுகோனே !!

ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா படுகோனே !!

ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா படுகோனே !!
X

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் ரன்வீர் சிங். தொடர்ந்து வெற்றிபடங்களை கொடுத்து வரும் இவரும் பிரபல நடிகை தீபிகா படுகோனேவும் காதலித்து வந்தனர். இந்த தகவல் இந்தி திரையுலகில் தீயாக பரவியது.

அதேவேகத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து இந்தி திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். இந்திய அணி உலக கோப்பை வென்ற 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட 83 படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தீபிகா அவரது மனைவியாகவும் நடித்து அசத்தினர்.

deepika

இந்த நிலையில் இருவரும் ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மும்பை பந்தரா பகுதியில் உள்ள சாகர் சேகம் அடுக்குமாடி குடியிருப்பில் 16,17,18,19 ஆகிய தளங்களை ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியினர் வாங்கியிருக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் நடிகர் ஷாருக்கானின் வீடும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பும் அமைந்துள்ளது.

deepika

இந்த வீட்டை இருவரும் பெரும் ஆலோசனைக்கு பிறகு பார்த்து ரசித்து அதன்பிறகே வாங்கியதாக கூறப்படுகிறது. அதாவது, கடற்கரையைப் பார்த்து அவர்கள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 11,266 சதுர அடி அளவுக்கான இடத்தையும், 1,300 சதுர அடி அளவுள்ள மொட்டை மாடியையும் வாங்கியுள்ளனர். அந்தப் பகுததியில் ஒரு சதுர அடி ரூ.1 லட்சம் அளவுக்கு விலை போகிறது என்பது கூடுதல் தகவல்.

தற்போது ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியின் ரூ.119 கோடி மதிப்பிலான வீடு பற்றி தான் இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.


newstm.in

Tags:
Next Story
Share it