3,000 கூலி படையினரை களமிறக்கினாரா? - கைதாகிறார் மகிந்த ராஜபக்சே !
3,000 கூலி படையினரை களமிறக்கினாரா? - கைதாகிறார் மகிந்த ராஜபக்சே !

இலங்கையில் பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்ற அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசும் திவாலாகி இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சே பதவி விலகும் முன்பாக, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படை ஆட்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார். இதில் மக்கள் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஆனால் அன்றிரவு இலங்கை போர்களமானது. நாடு முழுவதும் ஆளும் கட்சியை சேர்ந்த 78 எம்பி.க்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதனால், மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் தப்பி தலைமறைவானார்.
இந்நிலையில், கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்த வன்முறை, தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கை போலீசார், வன்முறை தூண்டி விட்டது தொடர்பாக ஏற்கனவே பல ஆளும் கட்சி எம்பி.க்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்தவிடமும் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று முன்தினம் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. வன்முறை தொடர்பாக மகிந்தவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
newstm.in